மறு அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின்  அரிசி ஆலை உரிமையாளர்களின்
சேவை  மறு அறிவித்தல் வரை  கொவிட் 19  அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்,  அரிசி உற்பத்தி,  களஞ்சியப்படுத்தல், மற்றும் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.