அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நிதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தொகையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரிசிக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்காக மத்திய வங்கியில் இருந்து தேவையான நிதியை வௌியிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.