(FASTNEWS|COLOMBO) – புத்தளம் – அருவாக்காளு குப்பை சேகரிப்பு பிரிவிற்கு இன்று முதல் குப்பைக்கூளங்களை அனுப்புவதற்கு கொழும்பு மாநகரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
வத்தளை – கெரவலப்பிட்டி குப்பை சேகரிப்பு மையம் மூடப்பட்டுள்ள நிலையில், கொழும்பு நகரில் குப்பைக்கூளங்கள் பெருகியுள்ளமையினால் கொழும்பில் தேங்கியுள்ள குப்பைகளை திரட்டி, புத்தளம் – அருவாக்காளுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.