அர்ஜுன ரணதுங்கவிற்கு எதிராக 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி திலங்க சுமதிபாலவினால் நுகேகொட மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீண்ட விசாரணைகளின் பின்னர் இன்று(24) நிராகரிக்கப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி அவரது வீட்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அர்ஜுன ரணதுங்க தன்னை அவமதித்ததாக குற்றஞ்சாட்டியே 2005ம் ஆண்டு மார்ச் 03ம் திகதி சுமதிபால அவர்களால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
(rizmira)