அர்ஜுனை நாடு கடத்தும் ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சைக்குரிய பிணைமுறி வழக்கு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.