அர்ஜுன் மகேந்திரனை பாதுகாக்கும் மஹிந்த!

மத்திய வங்கி சம்பவத்தின் கோப் அறிக்கை தொடர்பிலும், சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமை இரத்து செய்யப்பட்டமை தொடர்பிலும் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தினேஷ் குணவர்தன தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெறும் என பிரசன்ன ரணதுங்கவினால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன.

எனினும் தான் கூறும் வரையிலும், தான் நாடாளுமன்றத்திற்கு வரும் வரையிலும் மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வேண்டாம் என மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

பின்னர் நேற்று 2 மணியவில் நாடாளுமன்றத்திற்கு வருகைதந்த மஹிந்த ராஜபக்ச கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், “கோப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கும் இடமளிக்குமாறும், இது தொடர்பில் எவ்வித பகிரங்க கருத்துக்களையும் வெளியிட வேண்டாம்”… எனவும் மஹிந்த அறிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனான, Perpetual Treasuries நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் எலொசியஸ் மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகின்றது.

இதன் காரணமாகவே அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் கருத்து வெளியிடுவதனை மஹிந்த நிராகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளர்.