அறபுமொழியியைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வதிவிட பயிற்சி நெறியின் நிறைவு

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டினில் அறபுக் கலாசாலைகளில் அறபுமொழியியைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வதிவிட பயிற்சி நெறியின் நிறைவு மற்றும் சாண்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். அலியார்(றியாழி) தலைமையில் கடற்கரை சதுக்கத்தில் அமைந்துள்ள (இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின்) தாறுல் அர்கம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பயிற்சியினை முடிந்துக் கொண்ட 25 உலமாக்களுக்கு சாண்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது சவுதி நாட்டினை சேர்ந்த பேரறிஞர்கள், உலமாக்கள்,வைத்தியர்கள்,பாடசாலை அதிபர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்