(FASTNEWS | COLOMBO) – அலுகோசு பதவிக்காக முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்ட நபர்களை எதிர்வரும் 14ம்,15ம் திகதிகளில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அலுகோசு பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு அண்மையில் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு 30 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அலுகோசு பதவிக்காக இரண்டு பேர் தெரிவு செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.