பிணை முறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க பிணை முறி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அர்ஜூன் அலோசியஸிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது சட்டத்தரணி ஊடாக ஜனாதிபதி ஆணைக்குழு குறித்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதான முகவரான நுவான் சல்காதுவுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்குமாறு பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மேலும் பணிப்புரை விடுத்துள்ளது.
(rizmira)