மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேக நபராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் இடமிருந்து பணம் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை பெற்றுத் தருமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு சபாநாயகர் கருஜயசூரிய எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, பேர்பெச்சுவல் ட்ரசரீஸ் அல்லது அதற்கு நிகரான துணைபோகும் நிறுவனத்தினூடாக பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த பட்டியலை வழங்குமாறு நேற்று(31) குறித்த எழுத்துமூல கோரிக்கையினை முன்வைத்ததாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.