கடந்த தேர்தல் காலத்தின் போது, அர்ஜூன் அலோசியஸ் தன்னை சந்திக்க வந்து, தன்னிடம் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கியதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று(30) மல்வத்து பீட மகாநாயகர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது தெரிவித்திருந்தார்.
அதனை தான் எதிர்ப்பார்கவில்லை என தெரிவித்த அவர், தனக்கு அருகில் இருந்த வேட்பாளர்கள் இருவரிடம் குறித்த காசோலையை தான் கொடுத்து விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.