அலோசியஸ் மற்றும் பலிசேனவின் பிணை மனு நிராகரிப்பு…

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமது பிணை தொடர்பான மீள்பரிசீலனை மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(09) நிராகரித்துள்ளது.

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தமது பிணை தொடர்பான மீள்பரிசீலனை மனு ஒன்றை பெப்ரவரி 26 ஆம் திகதி தாக்கல் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma