அல் பக்தாதி தற்கொலை; டொனால்ட் ட்ரம்ப் உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக ஐ.எஸ்.அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது அதனை அமெரிக்க ஜனாதிபதி உறுதி செய்திருக்கிறார்.

வெள்ளை மாளிகையின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ட்ரம்ப் ​மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.