அவசரகால நிலையின் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள அவசரகால நிலை தொடர்பில் பொதுமக்களுக்கு நன்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று(06) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.