அவசரமாக தென்னாபிரிக்கா சென்ற ஷம்சி மீளவும் இலங்கைக்கு…

இலங்கை அணியுடன் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் பிற்பாடு தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்கா நோக்கி பயணித்த சுழற்பந்து வீச்சாளர் டெப்ரேஸ் ஷம்சி நேற்று(17) மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 04 விக்கெட்களை அவர் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் 20ம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சீ மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.