கண்டியில் இடம்பெற்ற இனவன்முறையின் விசாரணைகள் முடிவுறும் வரையில் அவசர காலநிலைச் சட்டத்தினை இரத்து செய்ய வேண்டாம் என பாதுகாப்புப் பிரிவு அரசிடம் கோரியுள்ளது.
பாதுகாப்பு பிரிவுக் குழுவின் தலைவர்களுடன் வாரா வாரம் இடம்பெறும் கலந்துரையாடல் கூட்டத்தின் போதே குறித்த கோரிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு பிரிவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிய கோரிக்கையினை நாளை(17) நாடு திரும்பவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் முன்வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-Riz