அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய 272 இலங்கையர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –– அவுஸ்திரேலிய மெல்பர்ன் நகரில் சிக்கியிருந்த 272 இலங்கையர்கள் இன்று (10) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் குறித்த 272 பேரும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ணில் இருந்து அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மேலும், விமானப்படையினர் இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து கிருமித் தொற்று நீங்கம் செய்துள்ளதுடன், குறித்த 272 பேரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்காக அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.