ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரஜெனகா தடுப்பூசிக்கு தடை

(ஃபாஸ்ட் நியூஸ் |  டென்மார்க்) – இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரஜெனகா மருந்து நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அனுமதி வழங்கி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிற நிலையில், அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதால் அதன் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்துவதாக டென்மார்க், ஐஸ்லாந்து, நார்வே உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட 49 வயது செவிலியர் உயிரிழந்ததால் ஆஸ்திரியாவும் கடந்த திங்கட்கிழமை முதல் தடை விதித்துள்ளது. டென்மார்க் மக்கள் தொகையில் 3.8 சதவிகிதம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் 22 பேருக்கு மட்டுமே பக்கவிளைவு அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.