ஆக்‌ஷன் நாயகியாக ஜோதிகா…

எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஜோதிகாவுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதாக கூறுகிறார்கள்.

காற்றின் மொழி படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகிறது. முக்கியமாக பெண்ணியம் சார்ந்த கதைகள் தான் அதிகமாக வருகிறது என்கிறார்.

அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் சொல்லிய ராட்சசி கதை பிடித்துப் போகவே உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டு படத்தை தொடங்கிவிட்டார்.

இந்தப் படத்தை டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஆக்‌‌ஷன் காட்சிகள் கூட இருக்கிறது என்கிறார்கள்.