ஆடை உற்பத்திற்கு கூடுதல் பங்களிப்புக்களை வழங்க வேண்டும்…

இலங்கைக்கு கூடுதலான அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதற்கான தேவை ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஆடை உற்பத்தித் துறைக்கு கூடுதல் பங்களிப்புக்களை வழங்க வேண்டும்.

இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுகையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆடை உற்பத்தியின் அதிகரிப்பிற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். ஆடை உற்பத்தித்துறையை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய தொழிற் துறைகளும் ஏற்றுமதிகளை விரிவுபடுத்துவது பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.