ஆட்சியிலிருந்து யார் விலகிச் சென்றாலும் 2020 வரை ஆட்சி நீடிக்கும்..

நல்லாட்சி அரசு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் எனவும், நல்லாட்சியிலிருந்து யார் வேண்டுமானாலும் விலகிச் செல்லலாம் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(30) காலை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும், தேசிய கணக்காய்வு சட்டம் கால தாமதமாகியுள்ளமை தொடர்பில் தான் வருத்தமடைவதாகவும் தேசிய கணக்காய்வு சட்டத்தை அமுல்படுத்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

 

(rizmira)