நாட்டின் சில பிரதேசங்களில் பலத்த காற்று…

நாட்டில் சில பிரதேசங்களில் மேற்கு , மத்திய , சப்ரகமுவ , வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மாதுறு ஓயா பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்கரையோர பிரதேசங்களில் ஓரளவு மழை பெய்யும் என்றும் திணைக்களம் இன்று(20)வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.