எதிர்வரும் சனிக்கிழமை(03) ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 3ம் திகதி சனிக்கிழமையும் மாணவர்களின் நலன் கருதி காலை 08.30 முதல் மாலை 04.30 வரை, சுகுருபாயவிலுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தைத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.