ஆனமடுவ பகுதியில் நேற்று(12) அதிகாலை 2.00 மணியளவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான உணவகம் ஒன்றில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குருணாகல் – புத்தளம் பிரதான வீதியில் ஆனமடுவ நகரில் அமைந்துள்ள மதீனா முஸ்லிம் உணவகத்திலேயே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதலுடன் சந்தேகத்தின் பேரில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த விசாரணைகளை ஆனமடுவ பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#rishma