ஆபாச வீடியோ பார்த்த 45 வயது நபர்

தொலைபேசியில் ஆபாச வீடியோ பார்த்த 45 வயது நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் யாழ். கலட்டி சந்தியில் நின்று தொலைபேசியில் ஆபாச படத்தினை பார்த்துக்கொண்டு இரந்துள்ளார்.

அந்த வீதியால் சென்ற பொலிஸார் நபரின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, தொலைபேசியை பார்த்த போதே விடயம் தெரியவந்துள்ளது.

உடனடியாக பொலிஸார் நபரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.