ஆப்கானிஸ்தானில் பொலிஸ் பயிற்சி மையம் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகள் மற்றும் பொலிசாரை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாக்தியா மாகாண தலைநகரான கார்டிசில் உள்ள பொலிஸ் பயிற்சி மையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் இன்று(17) தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாக்தியா பொலிஸ் தலைமையகம் அருகே நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.