ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 07 பேர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) -ஆப்கானிஸ்தான் நாட்டில் 03 இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் நகரில் தற்கொலைப் படையினரின் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இரு வேறு இடங்களிலும் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.

இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என அந்நாட்டு உள்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.