ஆப்கானிஸ்தான் – தற்கொலை படைத் தாக்குதலில் 8 பேர் பலி…

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 8 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குணார் மாகாணம். இங்குள்ள காவல் நிலைய சோதனைக்கு வெளியே தற்கொலைப்படை பயங்கரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.