ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு – கோட்டை லோட்டஸ்ட் வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் குமார் குணரட்னத்தை விடுதலை செய்யக் கோரி, அக் கட்சியினராலேயே குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.