சைட்டம் பிரச்சினை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காமலும், சொத்துக்களை சேதப்படுத்தாமலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
—————————————(UPDATE)
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்…
சைட்டம் எதிர்ப்பு தெரிவித்து களனி பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.