பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையின் போது தமது கட்சியின் தீர்மானத்தினை இன்று(03) இரவு எடுக்கவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளனர்.
இன்று மதியம் இரு தரப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
++++++++++(upadate)
ஆர்.சம்பந்தன் மற்றும் ஜனாதிபதி இடையே கலந்துரையாடல்…
எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை(04) பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-Rishma