ஆவா குழு தொடர்பில் சம்பந்தப்படும் 62 பேர்களில் 38 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாநயக்க இன்று(15) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.