எல்லாம் சுலபமாக நிறைவேறுவதாக நினைத்திருந்த சசிகலாவுக்கு முதலமைச்சர் பதவி இன்னும் கிடைக்காததும், தொடர்ச்சியான நெருக்கடிகளும் ப்ளட்பிரஷரை எகிற வைக்கின்றன என்கிறது கார்டன் வட்டாரம்.
பொதுக்குழுவின் ஒப்புதல், அதையடுத்து பொதுச்செயலாளர், உடனே முதல்வர் முழக்கம், தொண்டர்களோடு தரிசனம், முக்கிய நிர்வாகிகளோடு உரையாடல், வி.ஐ.பி.க்களை சந்தித்தல் என படு வேகம் காட்டிய சசிகலாவுக்கு திடீரென குறுக்கிட்டுள்ளது அரசியல் வேகத்தடை.
“முதல்வராக சின்னம்மா வரவேண்டும்’ என்கிற முழக்கம் அடியோடு நிறுத்தப்பட்டிருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய மன்னார்குடி உறவுகள், கட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நிறைய மறைமுக நடவடிக்கைகளை எடுத்தார் சசிகலா.
அதன் உச்சபட்சம், முதல்வர் ஒ.பி.எஸ்.சை தனது காலில் விழ வைத்ததும், துணைசபா நாயகர் தம்பிதுரை விதிகளுக்குப் புறம்பாக தனது லெட்டர் ஹெட்டையே பயன்படுத்த வைத்ததும்தான்.
இதனை டெல்லி ரசிக்கவில்லை. அதே சமயம், டெல்லிக்கு தலையையும் கார்ட னுக்கு வாலையும் காட் டிக்கொண்டிருந்த ஒ.பி.எஸ்., தனக்கு ஏற்படும் அவமானங்களை டெல்லிக்கு சொல்லத் தவறியதில்லை.
அதாவது, கார்ட னில் தினகரன் திட்டியது தொடங்கி, முதல்வர் பொறுப்பில் தனக்கிருக்கும் அவமானங்கள் வரை அனைத்தையும் அவ்வப்போது டெல்லிக்கு பாஸ் பண்ணியபடிதான் இருக்கிறார்.
“முதல்வர் பதவி யில் உட்கார்வதற்கான நேரத்தை சசிகலா குறித்துவிட்டார்’ என்றும், “கட்சி நிர்வாகிகளோடு நடத்தும் ஆலோசனைகளை முடித்துவிட்டு, எனது ராஜினாமா கடிதத்தை ராஜ்பவனுக்கு (கவர்னருக்கு) அனுப்பி வைப்பார் அல்லது கொடுக்க வைப்பார்’ என்றும் டெல்லிக்கு அழுத்தமாக தகவலை அனுப்பினார் ஒ.பி.எஸ்.
இதனையடுத்து, ஒ.பி.எஸ்.சை டிஸ்டர்ப் பண்ணவேண்டாமே என கார்டனுக்கு நாசூக்காகச் சொல்லிப்பார்த்தது.சசிகலா கணவர் நடராஜன் இதை பொருட்படுத்தவில்லை.
‘ கட்சியும் ஆட்சியும் சசிகலாவிடம் தான் இருக்கணும். ஆட்சிக்கு சசிகலா வந்தாலும் ஓ.பி.எஸ்.சைப் போல உங்களோடு இணக்கமாக இருப்போம்.
இதை ஏற்கலைன்னா வேறு யோசனையை நாங்க பரிசீலிப்போம்’ என நடராஜன் கறாராகச் சொல்ல… கோபமானது டெல்லி.
7 மாதங்களாகக் கிடப்பில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரப்போகிறது என ஒரு குண்டை வீச வைத்தது டெல்லி.
சசிகலா கலக்கமடைந்தார். தீர்ப்பு குறித்து முன்கூட்டியே வக்கீல்கள் அளித்த நம்பிக்கைகளையும் புறக்கணித்தார்.
முதல்வர் பதவியேற்புக்காக குறிக்கப்பட்ட தேதியை தள்ளி வைத்ததுடன் முதல்வர் கோஷத்தையும் நிறுத்தச்சொன்னார் சசிகலா என சுட்டிக் காட்டினார்கள்.
“சொத்துக்குவிப்பு வழக்கைக் காட்டி சசிகலாவை பயமுறுத்தியதோடு பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மூலமாகவும் சசிகலாவுக்கு செக் வைக்கும் நடவடிக்கைகளை டெல்லி எடுத்துள்ளது என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.
“இப்போதைய சூழலில், கார்டன் நெருக்கடி தந்தாலும் ராஜினாமா செய்யாதீர்கள்’ என ஒ.பி.எஸ்.சுக்கு முதலில் அட்வைஸ் பண்ணியது டெல்லி. அடுத்து, “முதல்வர் நேரில் வராமல் கார்டனிலிருந்து ராஜினாமா கடிதம் வந்தால் அதனை ஏற்க வேண்டாம்’ என ராஜ்பவனுக்கு உத்தரவிடப்பட்டது” என்கிறார் பொதுத்துறை அதிகாரி ஒருவர்.
இந்த விவரம் நடராஜனுக்கும் தெரிய வந்திருக்கிறது. அவருக்கு வேண்டப்பட்டவர்களோ, “”எங்களை டெல்லி அழிக்க நெனச்சா ஒ.பி.எஸ். ஆட்சியை கவிழ்த்துட்டு தி.மு.க.-காங்கிரஸ் சப்போர்ட்டோடு நாங்க ஆட்சிக்கு வருவோம்.
70 எம்.எல்.ஏ.க்கள் எங்க வசம் இருக்காங்க” என டெல்லிவாலாக்களிடம் நடராஜன் சொல்லிருக்காரு. இதையடுத்துதான் சீரியசாக தனது வேலையை காட்டியிருக்கிறது பா.ஜ.க.! அதன் ஒரு வழிதான் கவர்னருக்கான அட்வைஸ் என விவரித்தார்கள்.
மத்திய அரசு கொடுக்கும் நெருக்கடியை தனது அரசியல் நண்பர்களோடு தொடர்ந்து விவாதிக்கிறார் நடராஜன்.
அவர்களோ, பதவியிலிருந்து ஒ.பி.எஸ். இறங்கி சசிகலா முதல்வராகும் வாய்ப்பை சட்டப்படி நாம் உருவாக்கினாலும் ஆட்சி அமைக்க அழைக்கும் பொறுப்பு கவர்னரை சார்ந்தது.
அந்தச் சூழலில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை சொல்ல வைத்து சசிகலாவை பதவியேற்க விடாமல் தடுப்பார்கள்.
தீர்ப்பு வருவதற்கு முன்பே சசிகலா முதல்வரானாலும் தீர்ப்பு பாதகமாக வந்தால் முதல்வர் பதவி பறிபோகும். அதனால, சசிகலா முதல்வராவதை விட நீங்க முதல்வராகிவிடுங்க’ என ஐடியா தந்திருக்கிறார்கள்.
இதனை கார்டனில் நடுராத்திரியில் நடக்கும் சொந்தபந்தங்களின் ஆலோசனை நேரத்தில் சசிகலாவிடம் நடராஜன் சொல்லி மல்லுக்கட்ட, அதை ஏற்க மறுத்த சசிகலா, அக்கா (ஜெ.) உட்கார்ந்த பதவியில நான்தான் உட்காரணும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் பாருங்கன்னு கடுப்படிச்சிட்டார் என கார்டனுக்கு நெருக்கமான தரப்பில் எதிரொலிக்கிறது.
ஆனாலும் முதல்வர் பதவிக்காக கம்பு சுழற்றியபடியே இருக்கிறார் நடராஜன்.
ஆட்சியைக் கைப்பற்ற சசிகலா தரப்பினர் போடும் திட்டங்களை அனுப்புமாறு மத்திய உளவுத்துறையின் தென்மாநில ஐ.ஜி. வர்மாவுக்கு ஸ்பெஷல் அசைன்மெண்ட்டை கொடுத்திருந்தது டெல்லி.
ஜெயலலிதா இறந்ததிலிருந்தே தகவல் அனுப்பி வருகிறது மத்திய உளவுத்துறை. கடந்த சில நாட்களாக சசிகலாவிடம் நடராஜன் விவாதிப்பதையும் தினகரன், திவாகரன் உள்ளிட்ட சசியின் உறவுகளின் நடவடிக்கைகளையும் டெல்லிக்கு சொல்லி வருகிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள்.
இந்த தகவல்கள் கிடைத்த பிறகுதான் தினகரன் மீதிருக்கும் ஃபெரா வழக்கையும், நடராஜன் மீதான சொகுசு கார் வழக்கையும் தூசு தட்டி லைம் லைட்டுக்கு கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. திவாகரன் மீது வழக்கு ஏதேனும் இருக்கிறதா எனவும் ஆராய்ந் திருக்கிறது.
தினகரன் மீதான பெரா வழக்கில் 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து கார்டனில் பலத்த விவாதம் நடந்திருக்கிறது. தஞ்சையில் இருந்த திவாகரன், பொங்கல் முடிந்ததும் தான் சென்னை வர திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இந்த விவகாரம் அறிந்ததும் கடந்த வாரம் சென்னைக்கு வந்த திவாகரன், வழக்கு, அபராதம்னு தினகரனால நம்முடைய இமேஜ் ஸ்பாயிலாகுதுன்னு காட்டமாக சசிகலாவிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
தினகரனோ, திவாகரனையும் அவரோட பையனையும் அடங்கி இருக்கச் சொல்லுங்க. கள்ளத்துப்பாக்கி கடத்தும் கும்பலோடெல்லாம் பழக்கம் வெச்சிக்கிட்டிருப்பது பிரச்சனையாகுது என திவாகரனுக்கு எதிராக சீறிக்கொண்டிருக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் தீர்ப்பு வந்த பிறகு முதல்வர் பதவியை பற்றி யோசிக்கலாம் என சொந்தபந்தங்கள் பலரும் (நடராஜன் தவிர) வலியுறுத்தியிருப்பதால் அமைதியாக இருக்கிறார் சசிகலா.
கார்டனுக்குள் புதிதாக நுழைந்திருக்கும் கேரள ஜோதிடர்கள், 12-ந் தேதி பதவியேற்கலாம்னு உங்களுக்கு தேதி குறிச்சி கொடுத்தது யாரு? அது பௌர்ணமி தினம் என்பதைத் தாண்டி உங்க ஜாதகத்துக்கு வேறு எந்த விசேசமும் இல்லை.
ஜனவரி 12ங்கிறது மார்கழி மாசம். உங்களுக்கு நடக்கும் தசாபுத்திபடி அரசாளும் யோகமிருந்தாலும் மார்கழி மாசத்தில் முயற்சித்தால் கெட்டதாகத்தான் முடியும். தை பிறக்கட்டும். நல்ல நாள் பார்க்கலாம்’ என சசிகலாவின் ஜாதகத்துக்கு சோழி உருட்டி பலன் சொல்லியிருக்கிறார்களாம்.
தை மாதத்தில் முதல் 14 நாட்கள் தேய்பிறையாக இருந் தாலும் அதைப்பத்தி கவலைப் பட தேவையில்லை. உங்களுக்கு சஞ்சலமிருந்தால் ஜனவரி 27-க்குப் பிறகு (வளர்பிறை) நல்ல காரியத்திற்கு முயற்சிக்கலாம்” என்றும் சொல்லி யிருக்கிறார்களாம் ஜோதிடர்கள்.
புது ஜோதிடர்களை நம்பும் சசிகலா, தனக்கு தவறாக ஜோதிடம் கணித்த ஜெயலலிதாவின் ஜோதிடர்கள் மூன்று பேரை கார்டனிலிருந்து விரட்டிவிட்டுட்டாராம்.
தோற்றத்திலும் செய்கையிலும் ஜெ. போலவே மாறி வரும் சசிகலா, ஜெ.வின் கார், சேர் ஆகியவற்றைப் பயன்படுத்துவது போலவே கார்டனில் உள்ள ஜெ.வின் பெட்ரூமையும் பயன்படுத்தி யிருக்கிறார்.
ஜெ. இறந்த ஒரு சில நாட்களில், அவரது அறையில் உள்ள கட்டிலில் சசிகலா படுத்திருந்த போது, நெடுநேரம் தூக்கம் வராமல் தவித்திருக்கிறார். அப்போது ஏதோ ஒரு உருவம் அசைவது போலத் தெரிய… மிரண்டு போய், அறையிலிருந்து வெளியே வந்துவிட்டார் சசிகலா என்கிறார்கள்” கார்டன் உதவியாளர்கள்.
அம்மாவின் ஆவிதான் சின்னம்மா” என்று அவர்கள் சொல்ல, எனக்கும் அப்படித்தான் தோணுது என்றாராம் சசிகலா.
அம்மா ஆவின்னா சின்னம்மா ஏன் பயந்து ஓடி வரணும்? சின்னம்மா ஞாபகத்தில் அம்மா ஆவி வந்ததா? ஏதோ ஒரு மனக்குறையால ஆத்ம திருப்தியடையாம திரும்பி வந்ததா? யாருக்கும் தெரியாமல் இருக்கும் ரகசியங்களை வெளிக்காட்ட வந்ததா?” என கார்டன் பணியாளர்கள் கிசுகிசுப்பாகப் பேசுவது, பெரிய கேட்டைத் தாண்டி கசியத் தொடங்கியுள்ளது.
ஆன்மிகம் -ஜோதிடம் பரிகார தோஷம் உள்ளிட்ட அனைத்திலும் நம்பிக்கையுள்ள சசிகலா இந்த ஆவி பீதி பற்றி ஜோதிடர்களிடமும் தெரிவித்து நள்ளிரவு பரிகார பூஜை பற்றி கேட்டதாகவும் சொல்லும் கார்டன் தரப்பினர், ஜெ.வின் அறையில் சசிகலாவால் நிம்மதியாகப் படுக்கவும் முடியவில்லை. படுக்காமல் இருக்கவும் முடியவில்லை” என்கிறார்கள்.
அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள், நிர்வாகிகள் என அனைவரையும் கண்காணிக்குமாறு மாநில உளவுத்துறையின் உயரதி காரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம் கார்டன். அதன்படி கண்காணிக் கப்படுகிறார்கள். அப்படி கண்காணிக்கப்பட்டதில், கிடைத்த உளவுத்தகவல்களை துறையிலிருக்கும் அதிகாரி சமூகப் பாசத்துடன், அன்-அபிசியலாக அனுப்பி வைத்திருக்கிறார்.
அதில், உங்களை ஆதரிப்பதாக சொல்லுபவர்களில் 60 சதவீதம் பேர் நடிக்கிறார்கள். தங்களின் தொடர்புகளை வெவ்வேறு ரூட்டுகளில் விரிவுபடுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்களை முழுமையாக நீங்கள் நம்பமுடியாது’ என சொல்லப்பட்டுள்ளதாம்.
தீபாவுக்கு நாள்தோறும் ஆதரவு பெருகுவது நீடிக்குமா எனத் தெரி யாது. எனினும், உங்கள் மீது தொண்டர் களுக்கு அதிருப்தியும் கோபமும் உள்ள நிலையில், தீபாவுக்கு ஆதரவு கூடுவதை அனுமதிக்கக்கூடாது’ என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறதாம்.
ஒ.பி.எஸ்.ஸிடம் மாற்றம்!”முதல்வர் நாற்காலி மீதான ஆசையை தற்காலிகமாக சசிகலா ஒத்திவைத்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் முதல்வர் ஒ.பி.எஸ். மத்திய அரசின் சிக்னல்படி வேகமாக இயங்கு கிறார். கார்டனின் அனுமதிக்காகக் காத்திருப்பதில்லையாம்.
உதாரணமாக, கிருஷ்ணா நதி நீர் விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அரசு சார்பில் எடுத்த நடவடிக்கைக்கு கார்டனில் முன் அனுமதி வாங்கப்படவில்லை.
ஆந்திரா செல்வது உறுதி என முடிவெடுக் கப்பட்ட பிறகே கார்டனுக்கு தகவல் தந்திருக்கிறார் முதல்வர்’ என்கிறது கோட்டைத் தகவல்.
இது எத்தனை நாளைக்கோ” என்கிறார்கள் உயரதிகாரிகள்.