இங்கிலாந்திலுள்ள கிரிக்கெட் அணிகளுக்கான பாதுகாப்பு குறித்து விசேட கவனம் – குருசிங்க..

இலண்டனிலுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவிதமான சிக்கலும் இல்லையென இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி உட்பட ஏனைய அணிகளின் பாதுகாப்பு தொடர்பில் கைக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தல் விடுக்கும் எனவும் அசங்க குருசிங்க மேலும் கூறியுள்ளார்.

இலண்டனில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இலங்கை அணியின் பாதுகாப்பு குறித்து அவரிடம் வினவியதற்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

(rizmira)