இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களினால் வெற்றி

(FASTNEWS|COLOMBO)- இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று(21) இடம்பெற்ற போட்டியில், இலங்கை அணி, 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 27வது போட்டி இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லீட்ஸ்இ ஹெடிங்லீ மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 233 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 47 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில், லசித் மலிங்க அதிக விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனூடாக, லசித் மலிங்க, உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் 50 விக்கட்டுக்களைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் நான்காவது வீரராக இணைந்துள்ளார்.

நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக இலங்கை அணி, உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.