இங்கிலாந்தின் லீட்ஸில் இடம்பெற்ற துப்பாக்கித் தாக்குதல் சம்பவம் ஒன்றில், தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜோ கொக்ஸ் என்ற அவர் மேற்கு யோர்க்ஷெயாரில் உள்ள, பிரிஸ்ட்டால் பகுதியில் வைத்து இந்த தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்தியவர்கள் ‘பிரித்தானியாவை முன்னிலைப்படுத்து’ என்று கூறியபடியே இந்த தாக்குதலை நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கான இறுதி அஞ்சலி பல்வேறு தலைவர்களால் செலுத்தப்பட்டு வருகிறது