இங்கிலாந்து வீரர்கள் மைதானத்திலும் சரி வெளியிலும் சரி மரியாதையாகவே நடந்து கொள்கிறார்கள் என இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவரது முகநூல் கணக்கில் இது குறித்து இவ்வாறு பதியப்பட்டுள்ளது.
“..மைதானத்தில் அவர்களது திறமையினை பார்க்கும் போதே இங்கிலாந்தவர்கள் எப்படிப் பட்டவர்கள் என அறிய முடியும். அவர்களது செயல்பாடுகள் நடவடிக்கைகள் வெளியில் அதை விடச் சிறந்தது. அவர்கள் ஆச்சரியமாக இருக்கிறார்கள். ஹோட்டலில் உள்ள அடிமட்ட ஊழியர்களுக்கு கூட ‘சார்’ என்றே அழைக்கிறார்கள்..” என பதிவிட்டுள்ளார்.