(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு கட்சிகளும் இணைவதற்கு உடன்பட்டால் “ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன” என்று பெயரிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இதுவரை 06 கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.