மது போதையில் வாகனம் செலுத்திய 3493 பேர் கைது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(16) மாலை 6.00 மணி முதல் இன்று(17)காலை 6.00 மணி வரையிலான 24 மணித்தியாலத்தில், மது போதையில் வாகனங்களை செலுத்திய 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் மது போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

குறித்த காலப்பகுதிக்குள் 3493 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தொரிவித்துள்ளது.