(FASTNEWS|COLOMBO) – நேற்று(14) காலை 06 மணி முதல் இன்று(15) காலை 06 மணிவரையில் 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 05 அம் திகதி தொடக்கம் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை 8 ஆயிரத்து 717 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.