இத்தாலி சிசிலி தீவில் மழை, வெள்ளத்துக்கு 12 பேர் உயிரிழப்பு…

மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் புயல் காற்றுடன் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வார விடுமுறைக்காக பாலர்மோ பகுதியில் சுற்றுலா வந்து ஓய்வு விடுதியில் தங்கியிருந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த 9 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதேவேளை, மற்ற பகுதிகளில் 3 பேர் நீரில் மூழ்கியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.