அனுமதிப்பத்திரமின்றி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மதுபானப் போத்தல்கள் மற்றும் சிகரெட்டுக்களுடன், இந்தியப் பிரஜைகள் 05 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
45 மதுபானப் போத்தல்களுடன் 2200 சிகரெட்டுக்களும் குறித்த ஐவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த நபர்களை இன்று(14) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.