இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் தீர்மானமிக்க மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியுறும் தருவாயில் இருக்கையில் அதை தாங்கிக் கொள்ள இயலாத இலங்கை ரசிகர்கள் மைதானத்திற்கு போத்தல்களை எறிந்து தங்களின் எதிர்ப்பினை காட்டியமையினால், நேற்றைய குறித்த போட்டி தற்காலிகமாக சில நேரம் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குறித்த போட்டி இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி வெல்லுவதற்கு 8 ஓட்டங்களே மீதமுள்ள நிலையிலேயே ரசிகர்களின் செயலால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)