அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இரண்டாவது T-20 போட்டிக்கு பின்னர் விடுதிக்கு திரும்பிய அவுஸ்திரேலிய வீரர்களின் பேரூந்து தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள பாரஸ்பரா மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது T-20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து விடுதிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த பேரூந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பேரூந்தின் பக்கவாட்டு கண்ணாடியில் ஒன்று உடைந்து சிதறியுள்ளது. எதிர்பார்க்காத தாக்குதலை அடுத்து அவுஸ்திரேலிய வீரர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் தாக்குதலுக்கு உள்ளான பேரூந்தின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

(rizmira)