“அபாரம். அணியினையும் தாண்டி ஏதோவொரு சக்தி உள்ளது.” 2017 சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் நேற்றைய(08) போட்டியில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்ற வெற்றிக்கு தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் கருத்து ஒன்றினை குமார் சங்கக்கார பதிவேற்றியிருந்தார்.
அவ்வாறே, அவர் வர்ணனை செய்யும் பொது போட்டியின் இறுதியில் இலங்கை அணி இந்திய அணியினை வெற்றி கொண்டது என்பது பாராட்டத்தக்கது, அவர்களது அணியிலும் பார்க்க அவர்களின் ஒன்று கூடலில் ஏதோவொரு சூத்திரக் கணிப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார்.
லண்டன் – ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் இலங்கை அணி 322 என்ற இலக்கினை தண்டி 03 விக்கெட் இழப்பிற்கு வெற்றி வாகை சூடியதும் குறிப்பிடத்தக்கது.
