இந்தியாவிலுள்ள பாதையொன்றுக்கும் பூங்காவொன்றுக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரைச் சூட்டியுள்ளதாக இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை கௌரவிக்கும் முகமாக இவ்வாறு பெயர் சுட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக நுழைவாயில் வீதி மற்றும் பூங்கா என்பவற்றுக்கே இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளன.