(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் மகாராஷ்ட்ரா, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் மிகவும் பாதிப்பை சந்தித்துள்ளன.
கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியா முழுவதிலும் 540 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 17 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,734 ஆகவும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 473 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.