இந்தியாவில் பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை 6,725 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 547 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 119 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன