இந்தியாவை எதிர்கொள்வது தொடர்பில் பாபர் அசாம் மற்றும் உஸ்மானுக்கு சங்கா ஆலோசனை..

ஆசிய கிண்ண தொடரின் ‘A’ பிரிவில் இன்று(19) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இதேவேளை, பாகிஸ்தான் அணிக்கும் ஹொங்கொங் அணிக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற போட்டிக்கு இடையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம் மற்றும் உஸ்மன் சின்வாரிக்கும், இன்று இடம்பெறவுள்ள போட்டிக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தான் பிரிமியர் லீக் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில், அமைதியாக இருந்து தமது உணர்வுகளை கட்டுப்படுத்தி கொள்ளுமாறு சங்கக்கார அவ்விரு வீரர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.