(FASTNEWS | COLOMBO) – இந்தியா – மேற்கிந்திய அணிகள் மோதிய உலகக் கிண்ண தொடரின் 34-வது லீக் போட்டி நேற்று(27) மென்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நாணய சழற்சியை வென்ற இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 07 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்கள் பெற்றது. 269 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியானது 34.2 ஓவரில் 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

